உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய் உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய் மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய் குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன் குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே