Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1031
உறங்கு கின்றதும் விழிப்பதும் மகிழ்வாய் 

உண்ணு கின்றதும் உடுப்பதும் மயக்குள் 
இறங்கு கின்றதும் ஏறுகின் றதுமாய் 

எய்க்கின் றேன்மனம் என்னினும் அடியேன் 
அறங்கொள் நும்அடி அரண்என அடைந்தேன் 

அயர்வு தீர்த்தெனை ஆட்கொள நினையீர் 
புறங்கொள் காட்டகத் தீர்ஒற்றி உடையீர் 

பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.