உறவானை என்னுயிர்க்குள் உயிரா னானை உறுபிழைகள் செயினும்அவை உன்னி என்னை மறவானை அறவாழி வழங்கி னானை வஞ்சகர்க்குத் திருக்கோயில் வழிக்க பாடந் திறவானை என்னளவில் திறந்து காட்டிச் சிற்சபையும் பொற்சபையும் சேர்வித் தானை இறவானைப் பிறவானை இயற்கை யானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே