Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3141
உளவறிந்தோர் தமக்கெல்லாம் உபநிடதப் பொருளாய்

உளவறியார்க் கிகபரமும் உறுவிக்கும் பொருளாய்
அளவறிந்த அறிவாலே அறிந்திடநின் றாடும்

அடிமலர்கள் வருந்தியிட நடந்திரவில் அடைந்து
களவறிந்தேன் தனைக்கூவிக் கதவுதிறப் பித்துக்

கையில்ஒன்று கொடுத்தாய்நின் கருணையைஎன் என்பேன்
விளவெறிந்தோன் அயன்முதலோர் பணிந்தேத்தப் பொதுவில்

விளங்குநடம் புரிகின்ற துளங்கொளிமா மணியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.