Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5707
உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை 

உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக் 
கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது 

கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய் 
நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப 

நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத் 
தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.