Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3109
உள்ளுருகுந் தருணத்தே ஒளிகாட்டி விளங்கும்

உயர்மலர்ச்சே வடிவருந்த உவந்துநடந் தருளிக்
கள்ளமனத் தேனிருக்கும் இடந்தேடி அடைந்து

கதவுதிறப் பித்தருளிக் களித்தெனைஅங் கழைத்து
நள்ளுலகில் உனக்கிதுநாம் நல்கினம்நீ மகிழ்ந்து

நாளும்உயிர்க் கிதம்புரிந்து நடத்திஎன உரைத்தாய்
தெள்ளும்அமு தாய்அன்பர் சித்தம்எலாம் இனிக்கும்

செழுங்கனியே மணிமன்றில் திருநடநா யகனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.