உவந்தென துளத்தே உணர்த்திய எல்லாம்
உறுமலை இலக்கென நம்பி
நிவந்ததோள் பணைப்ப மிகஉளங் களிப்ப
நின்றதும் நிலைத்தமெய்ப் பொருள்இப்
பவந்தனில் பெறுதல் சத்தியம் எனவே
பற்பல குறிகளால் அறிந்தே
சிவந்தபொன் மலைபோல் இருந்ததும் இந்நாள்
திகைப்பதும் திருவுளம் அறியும்
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.