ஊணத் துயர்ந்த பழுமரம்போல் ஒதிபோல் துன்பைத் தாங்குகின்ற தூணத் தலம்போல் சோரிமிகும் தோலை வளர்த்த சுணங்கன்எனை மாணப் பரிவால் அருட்சிந்தா மணியே உன்றன் ஒற்றிநகர் காணப் பணித்த அருளினுக்கோர் கைம்மா றறியேன் கடையேனே