ஊர்என் றுடையீர் ஒற்றிதனை உலக முடையீர் என்னைஅணை வீர்என் றவர்முன் பலர்அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும் சேர்என் றுரைத்தால் அன்றிஅவர் சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ யார்என் றுரைத்தால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ