ஊற்றார் சடையீ ரொற்றியுளீ ரூரூ ரிரக்கத் துணிவுற்றீர் நீற்றால் விளங்குந் திருமேனி நேர்ந்திங் கிளைத்தீர் நீரென்றேன் சோற்றா லிளைத்தே மன்றுமது சொல்லா லிளைத்தே மின்றினிநா மேற்றா லிகழ்வே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ