ஊழ்வி னைப்படி எப்படி அறியேன் உஞற்று கின்றனன் உமதருள் பெறவே தாழ்வி னைத்தரும் காமமோ எனைக்கீழ்த் தள்ளு கின்றதே உள்ளுகின் றதுகாண் பாழ்வி னைக்கொளும் பாவியேன் செய்யும் பாங்க றிந்திலேன் ஏங்குகின் றனனால் வாழ்வி னைத்தரும் ஒற்றியூர் உடையீர் வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே