எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே இலகிய இறைவனே உலகில் பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக் கின்றனர் என்றே ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் உளம்பகீர் எனநடுக் குற்றேன் இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே