Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4111
எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே 

எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே 
சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே 

சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே 
மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள் 

மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே 
தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே 

தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.