எண்ணாமல் நாயடி யேன்செய்த குற்றங்கள் யாவும்எண்ணி அண்ணாநின் சித்தம் இரங்காய் எனில்இங் கயலவர்தாம் பெண்ஆர் இடத்தவன் பேரருள் சற்றும் பெறாதநினக் கொண்ணாதிவ் வண்மை விரதம்என் றால்என் உரைப்பதுவே