எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே எல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ் வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும் மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம் வாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில் விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும் வேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ