Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4155
என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே 

எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித் 
தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத் 

தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே 
அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே 

ஆவாஎன் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே 
பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே 

புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.