Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4149
என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே 

இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே 
தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே 

தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே 
மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த 

மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே 
மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே 

மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.