என்னேஎன் மீதெம் பெருமான் கருணை இருந்தவண்ணம் தன்னேர் இலாத அருட்பெருஞ் சோதியைத் தந்துலகுக் கன்னே எனவிளை யாடுக என்றழி யாதசெழும் பொன்னேர் வடிவும் அளித்தென் உயிரில் புணர்ந்தனனே