Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3041
என்னைஒன்றும் அறியாத இளம்பவருவந் தனிலே

என்உளத்தே அமர்ந்தருளி யான்மயங்குந் தோறும்
அன்னைஎனப் பரிந்தருளி அப்போதைக் கப்போ

தப்பன்எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய்
நின்னைஎனக் கென்என்பேன் என்உயிர் என்பேனோ

நீடியஎன் உயிர்த்துணையாம் நேயமதென் பேனோ
இன்னல்அறுத் தருள்கின்ற என்குருவென் பேனோ

என்என்பேன் என்னுடைய இன்பமதென் பேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.