Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3161
என்வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே

என்முன்அடைந் தெனைநோக்கி இளநகைசெய் தருளித்
தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பைஅவிழ்த் தெனக்குத்

தகுசுடர்ப்பூ அளிக்கவும்நான் தான்வாங்கிக் களித்து
மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல்

வேண்டுமென முன்னரது விரும்பியளித் தனம்நாம்
உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய்

ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.