எய்தற் கரிய அருட்சுடரே எல்லாம் வல்ல இறையோனே செய்தற் கரிய வளத்தணிகைத் தேவே உன்றன் ஆறெழுத்தை உய்தற் பொருட்டிங் குச்சரித்தே உயர்ந்த திருவெண் ணீறிட்டால் வைதற் கில்லாப் புகழ்ச்சிவரும் வன்கண் ஒன்றும் வாராதே