எழுத்தறிந்து தமையுணர்ந்த யோகர் உள்ளத் தியலறிவாம் தருவினில்அன் பெனுமோர் உச்சி பழுத்தளிந்து மவுனநறுஞ் சுவைமேற் பொங்கிப் பதம்பொருந்த அநுபவிக்கும் பழமே மாயைக் கழுத்தரிந்து கருமமலத் தலையை வீசும் கடுந்தொழிலோர் தமக்கேநற் கருணை காட்டி விழுத்துணையாய் அமர்ந்தருளும் பொருளே மோன வெளியினிறை ஆனந்த விளைவாந் தேவே