ஏடார் பொழில்சூழ் ஒற்றியினார் என்கண் அனையார் என்தலைவர் பீடார் மாலை இட்டதன்றிப் பின்னோர் சுகமும் பெற்றறியேன் வாடாக் காதற் பெண்களெலாம் வலது பேச நின்றனடி கோடார் கொங்கை மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே