Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3045
ஏறியநான் ஒருநிலையில் ஏறஅறி யாதே

இளைக்கின்ற காலத்தென் இளைப்பெல்லாம் ஒழிய
வீறியஓர் பருவசத்தி கைகொடுத்துத் தூக்கி

மேலேற்றச் செய்தவளை மேவுறவுஞ் செய்து
தேறியநீர் போல்எனது சித்தமிகத் தேறித்

தெளிந்திடவுஞ் செய்தனைஇச் செய்கைஎவர் செய்வார்
ஊறியமெய் அன்புடையார் உள்ளம்எனும் பொதுவில்

உவந்துநடம் புரிகின்ற ஒருபெரிய பொருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.