ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்தாய்நின் அருளமுதென் கைவரச்செய் துண்ணுவித்தாய் கங்கணம்என் கரத்தணிந்தாய் சைவர்எனும் நின்னடியார் சபைநடுவே வைத்தருளித் தெய்வமென்று வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்