Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3075
ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்

உபயவடி வாகியநின் அபயபதம் வருந்த
ஈங்கார நடந்திரவில் யானிருக்கும் இடம்போந்

தெழிற்கதவந் திறப்பித்தங் கென்னைவலிந் தழைத்துப்
பாங்காரும் வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்

பண்பொடுவாழ்ந் திடுகஎனப் பணித்தபரம் பொருளே
ஆங்கார வண்ணம்அகன் றதைஅறிந்து மகிழ்ந்தே

அனுபவிக்கின் றேன்பொதுவில் ஆடுகின்ற அரசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.