ஒருமைப் பயனை ஒருமைநெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப் பெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை அருமைக் களத்தில் கருமைஅணி அம்மான் தன்னை எம்மானை இருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணா திருந்தேனே