ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம் அருளி உளங்களித்தே திருவார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன் உருவார் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் உரைத்தருளே