Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3225
ஒல்லும்வகை அறியாதே உன்னருளோ டூடி

ஊறுபுகன் றேன்துயரம் ஆறும்வகை உணரேன்
புல்லியனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்

பூதியணிந் தொளிர்கின்ற பொன்மேனிப் பெருமான்
சொல்லியலும் பொருளியலும் கடந்தபர நாதத்

துரியவெளிப் பொருளான பெரியநிலைப் பதியே
மெல்லியல்நற் சிவகாம வல்லிகண்டு மகிழ

விரியுமறை ஏத்தநடம் புரியும்அருள் இறையே   

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.