Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5659
ஓங்கியஐம் பூஇவைக்குள் ஒன்றின்ஒன்று திண்மை 

உற்றனமற் றதுஅதுவும் பற்றுவன பற்றத் 
தாங்கியமா சத்திகளின் பெருங்கூட்டம் கலையாத் 

தன்மைபுரிந் தாங்காங்குத் தனித்தனிநின் றிலங்கித் 
தேங்கியபோ தவைகலையச் செய்கைபல புரிந்து 

திகழ்ஒளியாய் அருள்வெளியாய்த் திறவில்ஒளி() வெளியில் 
பாங்குறநேர் விளங்குகின்ற திருவடியின் பெருமை 

பகுத்துரைக்க வல்லவர்ஆர் பகராய்என் தோழி   
 () திருவில்ஒளி - பி இரா திருவிலொளி என்றும் 
பாடம் - ச மு க அடிக்குறிப்பு

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.