Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4095
கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே 

காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே 
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை 

சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா 
எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி 

என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே 
துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே 

சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.