கடனே அடியர் தமைக்காத்தல் என்றால் கடையேன் அடியன்அன்றோ உடன்நேர் பிணியும் ஒழித்திலைஎன் உள்ளத் துயரும் தவிர்த்திலையே விடன்நேர் கண்டத் தின்னமுதே வேத முடியில் விளங்கொளியே அடன்ஏர் விடையாய் திருஒற்றி அப்பா உனைநான் அயர்ந்திலனே