கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே இணக்கம்உறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும் இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில் பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே