கண்டே களிக்கும் பின்பாட்டுக் காலை இதுஎன் றருள்உணர்த்தக் கொண்டே அறிந்து கொண்டேன்நல் குறிகள் பலவுங் கூடுகின்ற தொண்டே புரிவார்க் கருளும்அருட் சோதிக் கருணைப் பெருமனே உண்டேன் அமுதம் உண்கின்றேன் உண்பேன் துன்பை ஒழித்தேனே