Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1049
கண்ணினால் உனது கழற்பதம் காணும் 

கருத்தினை மறந்துபாழ் வயிற்றை 
மண்ணினால் நிறைத்தல் எனஉண வருந்தி 

மலம்பெற வந்தனன் அதனால் 
எண்ணினால் அடங்கா எண்குணக் குன்றே 

இறைவனே நீஅமர்ந் தருளும் 
தண்ணினால் ஓங்கும் ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.