கண்ணின் மணிபோ லிங்குநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம் பண்ணின் மொழியாய் நின்பாலோர் பறவைப் பெயர்வேண் டினம்படைத்தான் மண்ணின் மிசையோர் பறவையதா வாழ்வாயென்றா ரென்னென்றே னெண்ணி யறிநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ