Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1068
கண்ணுண் மாமணி யேஅருட் கரும்பே 

கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே 
எண்ணுள் உட்படா இன்பமே என்றென் 

றெந்தை நின்றனை ஏத்திலன் எனினும் 
மண்ணுள் மற்றியான் வழிவழி அடியேன் 

மாய மன்றிதுன் மனம்அறிந் ததுவே 
திண்ணம் ஈந்தருள் ஒற்றியூர் அரசே 

தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.