Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3241
கண்ணுளே விளங்குகின்ற மணியே சைவக்

கனியேநா வரசேசெங் கரும்பே வேதப்
பண்ணுளே விளைந்தஅருட் பயனே உண்மைப்

பதியோங்கு நிதியேநின் பாதம் அன்றி
விண்ணுளே அடைகின்ற போகம் ஒன்றும்

விரும்பேன்என் றனையாள வேண்டுங் கண்டாய்
ஒண்ணுளே ஒன்பதுவாய் வைத்தாய் என்ற

உத்தமனே() சித்தமகிழ்ந் துதவு வோனே   

 எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ

எம்பெருமான் திருவடியே எண்ணினல்லால்
கண்ணிலேன் மற்றோர்க ளைகண்இல்லேன்

கழலடியே கைதொழுது காணின்அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல்வைத்

தாய்ஒக்க அடைக்கும்போ துணரமாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணியனே
 (--) திருநாவுக்கரசர், திருப்புகலூர்த் திருத்தாண்டகம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.