Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4224
கண்ணேறு படும்எனநான் அஞ்சுகின்றேன் எனது 

கணவர்வடி வதுகாணற் கென்றஅத னாலோ 
எண்ணாத மனத்தவர்கள் காணவிழை கின்றார் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
நண்ணாரில் கடுத்தமுகம் தோழிபெற்றாள் அவளை 

நல்கிஎனை வளர்த்தவளும் மல்கியவன் படுத்தாள் 
பெண்ணாயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே 

பெரியநட ராயர்உள்ளப் பிரியம்அறிந் திலனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.