Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4845
கன்மம்எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே 

கங்குகரை காணாத கடல்போலே வினைகள் 
நன்மையொடு தீமைஎனப் பலவிகற்பங் காட்டி 

நடத்தினைநின் நடத்தைஎலாம் சிறிதும்நட வாது 
என்முன்இருந் தனைஎனில்நீ அழிந்திடுவாய் அதனால் 

இக்கணத்தே நின்இனத்தோ டேகுகநீ இலையேல் 
இன்மையுற மாய்த்திடுவேன் என்னையறி யாயோ 

எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.