கயந்துளே உவட்டும் காஞ்சிரங் காயில்
கடியனேன் காமமே கலந்து
வியந்துளே மகிழும் வீணனேன் கொடிய
வெகுளியேன் வெய்யனேன் வெறியேன்
மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை
மக்களை ஒக்கலை மதித்தே
நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.