கயவர் இல்லிடைக் கலங்கலை நெஞ்சே காம ஐம்புலக் கள்வரை வீட்டி வயம்அ ளிக்குவன் காண்டிஎன் மொழியை மறுத்தி டேல்இன்று வருதிஎன் னுடனே உயவ ளிக்குநல் ஒற்றியூர் அமர்ந்தங் குற்று வாழ்த்திநின் றுன்னுகின் றவர்க்குத் தயவ ளிக்குநம் தனிமுதல் செல்வத் தந்தை யார்அடிச் சரண்புக லாமே