Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3779
கயவு செய்மத கரிஎனச் செருக்கும் 

கருத்தி னேன்மனக் கரிசினால் அடைந்த 
மயர்வு நீக்கிட வந்துநிற் கின்றேன் 

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் 
உயவு வந்தருள் புரிந்திடாய் எனில்என் 

உயிர் தரித்திடா துன்அடி ஆணை 
தயவு செய்தருள் வாய்வடல் அரசே 

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே    

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 திருவருட் பேறு 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.