Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :889
கரிய மாலன்று கரியமா வாகிக்
கலங்க நின்றபொன் கழல்புனை பதத்தார்
பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும்
பித்தர் என்னும்அப் பேர்தனை அகலார்
உரிய சீர்கொளும் ஒற்றியூர் அமர்ந்தார்
உம்பர் நாயகர் தம்புயம் புனைய
வரிய கன்றநன் மலர்கொடு தெரிந்து
மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.