கரிய மாலன்று கரியமா வாகிக் கலங்க நின்றபொன் கழல்புனை பதத்தார் பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும் பித்தர் என்னும்அப் பேர்தனை அகலார் உரிய சீர்கொளும் ஒற்றியூர் அமர்ந்தார் உம்பர் நாயகர் தம்புயம் புனைய வரிய கன்றநன் மலர்கொடு தெரிந்து மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே