Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3713
கருங்களிறு போல்மதத்தால் கண்செருக்கி வீணே 

காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய் 
ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய் 

உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப் 
பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும் 

பிறர்அறியா வகைபெரிதும் பெறுதும்என உள்ளே 
மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.