Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3098
கருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த

கழலடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து
மருணிறையுஞ் சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து

மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தழைத்து மகனே
பொருணிறையும் இதனைஇங்கே வாங்கெனஎன் கரத்தே

பொருந்தஅளித் தருளியநின் பொன்னருள்என் என்பேன்
அருணிறையும் பெருங்கடலே அம்பலத்தில் பரமா

னந்தவுரு வாகிநடம் ஆடுகின்ற அரசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.