கருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த கழலடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து மருணிறையுஞ் சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தழைத்து மகனே பொருணிறையும் இதனைஇங்கே வாங்கெனஎன் கரத்தே பொருந்தஅளித் தருளியநின் பொன்னருள்என் என்பேன் அருணிறையும் பெருங்கடலே அம்பலத்தில் பரமா னந்தவுரு வாகிநடம் ஆடுகின்ற அரசே