கருதற் கரியார் கரியார்முன் காணக் கிடையாக் கழலடியார் மருதத் துறைவார் திருவொற்றி வாண ரின்றென் மனைக்குற்றார் தருதற் கென்பா லின்றுவந்தீ ரென்றே னதுநீ தானென்றார் வருதற் குரியீர் வாருமென்றேன் வந்தே னென்று மறைந்தாரே