கருத்தறி யாச்சிறி யேன்படுந் துன்பக் கலக்கமெல்லாம் உருத்தறி யாமை பொறுத்தருள் ஈபவர் உன்னையன்றித் திருத்தறி யார்பிறர் அன்றேமென் கன்றின் சிறுமைஒன்றும் எருத்தறி யாதுநற் சேதா அறியும் இரங்குகவே