Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4879
கருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும் 

கலக்கமுறேல் இதுதொடங்கிக் கருணைநடப் பெருமான் 
தருநாள்இவ் வுலகமெலாம் களிப்படைய நமது 

சார்பின்அருட் பெருஞ்ஸோதி தழைத்துமிக விளங்கும் 
திருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான் 

திண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே 
வருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து மயங்கேல் 

வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.