பாடல் எண் :1015
கருமை யாம்அகங் காரமர்க் கடவா
கடைய னேஉனைக் கலந்தத னாலே
அருமை யாகநாம் பாடினோம் கல்வி
அறஅ றிந்தனம் அருளையும் அடைந்தோம்
இருமை இன்பமும் பெற்றனம் என்றே
எனைம தித்துநான் இழிவடைந் தனன்காண்
ஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே
பாடல் எண் :1852
கருமை யளவும் பொழிலொற்றிக்
கணத்தீர் முனிவர் கலக்கமறப்
பெருமை நடத்தி னீரென்றேன்
பிள்ளை நடத்தி னானென்றார்
தரும மலவிவ் விடையென்றேன்
றரும விடையு முண்டென்பா
லிருமை விழியா யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.